மத்திய கிழக்கில் பதற்றம் தீவிரம்; லெபனான் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்கியதில் மூவர் உயிரிழப்பு

லெபனான் தலைநகர் பெய்ரூட் அருகே இஸ்ரேலிய படையினர் நடத்திய வான்வழித் தாக்குதலில் மூவர் உயிரிழந்துள்ளதாக லெபனான் அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தத் தாக்குதல் குறித்து லெபனான் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், பெய்ரூட் சர்வதேச விமான நிலையத்தை ஒட்டியுள்ள பிரதான வீதியில் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய படையினரின் இந்த தாக்குதலில் சிக்கி மூவர் உயிரிழந்ததுடன், மேலும் அறுவர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதல் குறித்த மேலதிக விபரங்கள் எதனையும் லெபனான் அரசாங்கம் இதுவரை வெளியிடவில்லை.
ஏற்கனவே லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய பல்வேறு தாக்குதல்களில் இதுவரை சுமார் 50 பேர் உயிரிழந்துள்ள நிலையில், தற்போதைய இந்தத் தாக்குதல் அந்தப் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
![]()