உலகம்

அமெரிக்காவில் உலகக் கிண்ண கால்பந்து போட்டிகள் ரத்தாகுமா?

அமெரிக்க அரசாங்கத்தின் ஒரு பகுதி முடக்கம் காரணமாக, உலகக் கிண்ண கால்பந்து போட்டிகளை நடத்தும் நகரங்களுக்கு வழங்கப்பட வேண்டிய 900 மில்லியன் டொலர் பாதுகாப்பு நிதி முடக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதத் தடுப்பு மற்றும் ஆளில்லா விமானங்களை (Drones) கண்காணிக்கும் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட இந்த நிதி கிடைக்காததால், பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

மார்ச் இறுதிக்குள் நிதி கிடைக்காவிட்டால், திட்டமிடப்பட்ட பாதுகாப்புப் பணிகளில் “பேரழிவு” ஏற்படக்கூடும் என மியாமி மற்றும் கன்சாஸ் நகர காவல்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

நிதி வழங்கப்படாவிட்டால் போட்டிகளை நடத்துவதில் இருந்து விலகப் போவதாக பாஸ்டன் நகர அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

ஜூன் 11-ஆம் திகதி உலகக் கிண்ண கால்பந்து தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், நிதி நெருக்கடி பெரும் சவாலாக உருவெடுத்துள்ளதாக பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *