கவிதைகள்

ஊர் உவக்கும் பண்பு!… கவிதை… ஜெயராமசர்மா

கடல் அலைகள் ஆர்ப்பரித்துக்
கரை தொட்டு மீளும்
மனதி லெழும் நினைவுகளும்
மறு படியும் மீளும்

வான் பறக்கும் பறவைகளும்
மண் தொட்டு நிற்கும்
மனம் இருக்கும் சுமையெல்லாம்
மண் ஏற்று நிற்கும்

தேன் எடுக்கும் வண்டெல்லாம்
திசை எங்கும் திரியும்
தெளிவு பெறா நிலையினிலே
தேடுகிறார் பல பேர்

ஊர் நடுவே பழுத்தமரம்
ஒரு பேதம் காட்டா
பேர் பெற்றார் என்பார்கள்
பின் பற்றார் பண்பை

நீர் கொடுக்கும் மழையே
பார் பெற்ற வரமே
ஊர் உவக்கும் பண்பே
உயர் மனிதப் பிறப்பே

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், அவுஸ்திரேலியா

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *