கனடா மருத்துவமனையில் இந்தியர் மரணம்: அமெரிக்கரால் உருவாகியுள்ள சர்ச்சை

கனடாவில் மருத்துவமனை ஒன்றின் அலட்சியத்தால் இந்திய வம்சாவளியினர் ஒருவர் உயிரிழந்த விடயம் உலகின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், அமெரிக்கர் ஒருவர் அது குறித்து மோசமாக விமர்சித்துள்ள விடயம் கடும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
மூன்று குழந்தைகளின் தந்தையும் இந்திய வம்சாவளியினருமான ப்ரஷாந்த் ஸ்ரீகுமார் (22) என்பவருக்கு, அலுவலகத்தில் பணி செய்துகொண்டிருக்கும்போது, இம்மாதம், அதாவது, டிசம்பர் மாதம் 22ஆம் திகதி, அவருக்கு கடுமையான நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.
உடனடியாக அவர் எட்மண்டனிலுள்ள Grey Nuns Hospital என்னும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
அவர் கடுமையான நெஞ்சு வலி வந்து துடித்த நிலையிலும், எட்டு மணி நேரமாக மருத்துவமனையின் நோயாளிகள் காத்திருக்கும் அறையில் அமரவைக்கப்பட்டுள்ளார்.

ப்ரஷாந்தின் மரணம் உலகின் கவனம் ஈர்த்துள்ள நிலையில், அமெரிக்க சட்டத்தரணி ஒருவர், ப்ரஷாந்தின் இறப்பை புலம்பெயர்தலுடன் தொடர்புபடுத்தி மோசமாக விமர்சித்துள்ளார்.
எட்டு மணி நேரம் நெஞ்சு வலியால் துடிதுடித்து உயிரிழந்த ப்ரஷாந்தின் மனைவி, அநாகரீகமாக நடந்துகொண்டதாக அவரிடம் கூறப்பட்டதாக எக்ஸில் ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், அது குறித்து விமர்சித்துள்ள Andrew Branca, ’அவளும் அவளது கணவரும் பேசாமல் இந்தியாவிலேயே இருந்திருந்தால் கனடாவின் சுகாதார அமைப்பின் மோசமான அனுபவத்தை தவிர்த்திருக்கலாம்’ என்று கூறியதுடன், இந்திய சுகாதார அமைப்பையும் மோசமான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார்.
Andrew Brancaவின் இடுகைக்கு கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது.
![]()