முச்சந்தி

கிறிஸ்துமஸ் பொது மன்னிப்பு – விரைவில் கைதிகள் விடுதலை

வருடாந்திர கிறிஸ்துமஸ் பொது மன்னிப்பின் கீழ் கைதிகள் விடுதலை விரைவில் நடைபெறும் என சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

கிறிஸ்துமஸ் தினத்தன்று கைதிகள் விடுதலை நடைபெறாத முதல் சந்தர்ப்பம் இந்த ஆண்டு ஆகும்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள சிறைச்சாலைகள் திணைக்களத்தின் செய்தித் தொடர்பாளர் ஜெகத் வீரசிங்க,

விடுதலைக்கு தகுதியான கைதிகளின் பட்டியல் ஏற்கனவே சம்பந்தப்பட்ட அமைச்சகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இருப்பினும் கைதிகள் தொடர்பான கூடுதல் அறிக்கைகள் கோரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நிர்வாக நடைமுறைகள் முடிந்ததும் கிறிஸ்துமஸ் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய அனுமதிக்கப்பட்ட கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்றும் அவர்   உறுதிப்படுத்தியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *