இலங்கை

கண்டியில் முற்றாக அழிந்த வீட்டினுள் 50 இலட்சம் ரூபா நகைகள், 3 லட்சம் ரூபா பணம் மீட்பு

கண்டி ஹங்குராங்கெத்த பிரதேச அனர்த்த மீட்பு நடவடிக்கைகளின்போது, இராணுவ வீரர்கள் இடிபாடுகளுக்குள் இருந்து கண்டுபிடித்த ரூபா 300,000 ரூபா ரொக்கப் பணம் மற்றும் சுமார் 50 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் உரிய உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கண்டி ஹங்குராங்கெத்த பிரதேச செயலகத்துடன் இணைக்கப்பட்டு அனர்த்த நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரர்கள், தொடர்ச்சியாக மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின்போது இந்த பெறுமதியான பொருட்களைக் கண்டுபிடித்தனர்.

மண்சரிவு காரணமாக முழுமையாக அழிந்துபோன ஒரு வீட்டின் இடிபாடுகளுக்குள் இருந்தே இந்த பொருட்களும் பணமும் கண்டுபிடிக்கப்பட்டன.

கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் மற்றும் பணம் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை அதன் உரிமையாளரிடம் இராணுவத்தினரால் முறையாகவும் பாதுகாப்பாகவும் ஒப்படைக்கப்பட்டது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *