முச்சந்தி

அவுஸ்திரேலிய வலதுசாரி அரசியலும் பாராளுமன்றில் இஸ்லாமவோபியா?….  ஐங்கரன் விக்கினேஸ்வரா

(கடந்த சில ஆண்டுகளாக ஐரோப்பா முழுவதும் இஸ்லாமிய வெறுப்பு அதிகரித்துள்ளது. பல அரசியல் கட்சிகள் மக்கள் குடியேற்ற எதிர்ப்பு நிலைப்பாட்டைப் பரப்புவதால் இது தூண்டப்பட்டுள்ளது. இஸ்ரேலின் காசா போருக்குப் பிறகு அவுஸ்திரேலியாவில் இஸ்லாமிய வெறுப்பு சம்பவங்கள் பலவும் விரைவாக அதிகரித்துள்ளன)
நீண்ட காலமாக குயின்ஸ்லாந்தின் செனட்டரான பாலின் ஹான்சன் (Pauline Hanson), ஆசியாவிலிருந்து குடியேறுவதற்கும் புகலிடம் கோருபவர்களுக்கு தொடர்ந்து எதிர்ப்பை தெரிவித்து வருகிறார். அவரது கடுமையான எதிர்ப்பின் காரணமாக 1990 களில் முதன்முதலில் முக்கியத்துவம் பெற்றார். மேலும் அவரது பாராளுமன்ற வாழ்க்கையில் இஸ்லாமிய உடைகளுக்கு எதிராக நீண்ட காலமாக பிரச்சாரம் செய்து வருகிறார்.
அவர் முன்னர் 2017 இல் பாராளுமன்றத்திற்கு புர்கா அணிந்து வந்து தடைக்கு அழைப்பு விடுத்தார். ஹான்சனின் ஒன் நேஷன் (One Nation Party) கட்சி செனட்டில் நான்கு இடங்களைக் கொண்டுள்ளது. கடந்த பொதுத் தேர்தலில் தீவிர வலதுசாரி குடியேற்ற எதிர்ப்புக் கொள்கைகளுக்கு ஆதரவு அதிகரித்து வந்த நிலையில் இரண்டு இடங்களைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
தற்போது சர்ச்சைக்குரிய வகையில் அவுஸ்திரேலிய நாடாளுமன்றக் 24/11/2025 கூட்டத் தொடரின் போது புர்கா அணிந்து போராட்டம் நடத்திய வலதுசாரி அரசியல்வாதியான பாவ்லின் ஹான்சன் மீண்டும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் வலதுசாரி கட்சியான ‘ஒன் நேஷன்’ கட்சியின் தலைவராக 71 வயதான பாலின் ஹேன்சன் இருந்து வருகிறார். இவர், அந்த நாட்டு நாடாளுமன்றமான செனட் சபையின் உறுப்பினரும் ஆவார்.
புர்கா அணிய தடை :
பொது இடங்களில் முகத்தையும் மூடும் வண்ணம் அணியும் ‘புர்கா’ மற்றும் பிற ஆடைகளை அணிவதைத் தடை செய்ய வேண்டும் என்ற சட்ட மூலத்தை பாலின் ஹேன்சன் அண்மையில் கொண்டு வந்தார்.
இந்த சட்ட மூலம் வாக்கெடுப்பில் தோல்வியடைந்த பின்னர், மீண்டும் சபை கூடியபோது தனது ஆடைகளின் மேல் பர்தாவை அணிந்து வந்தார். இவர் அவுஸ்திரேலியாவில் முஸ்லிம் ஆடைகளுக்கு எதிராக நீண்டகாலமாக செயல்பட்டு வருகிறார். 2017 ஆம் ஆண்டும் இதேபோன்று செயற்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவுஸ்திரேலிய நாடாளுமன்றில் ஒரு வார காலத்திற்கு ஹான்சனை இடைநீக்கம் செய்தனர். பாலின் ஹேன்சன் மன்னிப்பு கேட்காமையினால் நாடாளுமன்றம் செவ்வாயன்று ஒரு கண்டனத் தீர்மானத்தை நிறைவேற்றி அவர் தொடர்ந்து ஏழு அமர்வுகளில் பங்கேற்க தடைசெய்தது.
அவுஸ்திரேலிய நாடாளுமன்றுக்கு புர்கா அணிந்து வந்த செனட்டர் பாலின் ஹேன்சனின் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்த அரசாங்கத்தின் தலைமைச் செனட்டர் பென்னி வோங், ஒரு முழு மதத்தையே கேலி செய்து அவமதிக்கும் செயல் என கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவின் மொத்த 28 மில்லியன் மக்கள்தொகையில், இஸ்லாமிய மதத்தைப் பின்பற்றுபவர்கள் சுமார் ஒரு மில்லியன் பேர் உள்ளனர். அவர்களின் நம்பிக்கைகளை இவ்வாறான செயல் துன்புறுத்துவதாகவும், சமூக ஒற்றுமையை பாதிப்பதாகவும் செனட்டர் பென்னி வோங், குறிப்பிட்டுள்ளார். 2021 அவுஸ்திரேலியா மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அவுஸ்திரேலியா மக்கள் தொகையில் 3.2 சதவீதம் பேர் முஸ்லிம்கள் ஆவார்கள்.
அவுஸ்திரேலியாவில் தீவிர வலதுசாரி:
தீவிர வலதுசாரி செனட்டர் மீண்டும் பாராளுமன்றத்தில் பர்தா அணிந்ததால் கடும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். இஸ்லாமிய வெறுப்பு மற்றும் இனவெறியை தூண்டியுள்ளார் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
முஸ்லிம் ஆடையை பொது இடங்களில் தடை செய்வதற்கான தனது பிரச்சாரத்தை முன்னெடுக்கும் முயற்சியில் செனட்டர் பவுலின் ஹான்சன் இந்த அரசியல் சாகசத்தை மேற்கொண்டார்.
அவுஸ்திரேலியாவில் பொது இடங்களில் புர்காக்கள் மற்றும் பிற முழு முகத்தை மறைக்கும் ஆடைகளை தடை செய்யும் மசோதாவை அறிமுகப்படுத்த அனுமதி மறுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே ஹான்சன் இதனை அணிந்து கொண்டு வந்தார்.
ஹான்சன் முஸ்லிம் பெண்கள் அணியும் தலைக்கவசத்தை நாடாளுமன்றத்தில் பயன்படுத்துவது இது இரண்டாவது முறையாகும். பர்தா அணிந்து அவர் அறைக்குள் நுழைந்தபோது செனட் சபை கோபத்தில் வெடித்தது. ஹான்சன் அதை அகற்ற மறுத்ததால் செனட் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டன.
இது ஒரு இனவெறி, அப்பட்டமான இனவெறியைக் காட்டுகிறது என்று நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த கிரீன்ஸ் செனட்டரான முஸ்லிம் மெஹ்ரீன் ஃபரூகி கூறினார்.
மேற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தைச் சேர்ந்த சுயேச்சை செனட்டரான பாத்திமா பேமன், இந்த சாகசத்தை அவமானகரமானது என்றும் கூறினார். செனட்டில் அவுஸ்திரேலியாவின் தொழிற்கட்சி அரசாங்கத்தின் தலைவரான பென்னி வோங் மற்றும் எதிர்க்கட்சி கூட்டணியின் துணை செனட் தலைவர் ஆன் ரஸ்டனும், ஹான்சனின் இந்த செயல்களைக் கண்டித்தனர்.
இதேவேளை பெனி வோங், அவுஸ்திரேலியா செனட் உறுப்பினராக இவர் இருக்க தகுதியற்றவர்கள் என்று கூறி, ஆடையை அகற்றத் தவறியதற்காக ஹான்சனை இடைநீக்கம் செய்ய ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தார். ஹான்சன் வெளியேற மறுத்ததைத் தொடர்ந்து, செனட் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டன.
அவுஸ்திரேலியாவில் இஸ்லாமிய வெறுப்பு?
கடந்த சில ஆண்டுகளாக ஐரோப்பா முழுவதும் இஸ்லாமிய வெறுப்பு அதிகரித்துள்ளது.ஐரோப்பிய நாடுகளில் பல அரசியல் கட்சிகள் மக்கள் குடியேற்ற எதிர்ப்பு நிலைப்பாட்டைப் பரப்புவதால் இது தூண்டப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் காசா போருக்குப் பிறகு அவுஸ்திரேலியாவில் இஸ்லாமிய வெறுப்பு சம்பவங்கள் பலவும் விரைவாக அதிகரித்துள்ளன. முஸ்லிம் எதிர்ப்பு சம்பவங்கள் நேரடி பாதிப்பாக 150 சதவீதமாகவும், இணைய வழி தாக்குதல்கள் 250 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் ஒரு சுயாதீன அறிக்கை தெரிவிக்கிறது.
அவுஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பானீஸ், காசா மீதான இஸ்ரேலின் போர் தொடங்கியதிலிருந்து நாட்டில் முஸ்லிம் எதிர்ப்பு சம்பவங்கள் விண்ணை முட்டும் என்பதைக் கண்டறிந்த ஒரு சுயாதீன அறிக்கையின் பரிந்துரைகளை தனது அரசாங்கம் கவனமாக பரிசீலிக்கும் என்று கூறியுள்ளார்.
​​அவுஸ்திரேலியார்களை அவர்களின் மத நம்பிக்கைகளின் அடிப்படையில் குறிவைப்பது நாட்டின் முக்கிய மதிப்புகள் மீதான தாக்குதல் என்றும் கூறியுள்ளார். அவுஸ்திரேலியார்கள் எந்த சமூகத்திலும், எப்போதும் தங்கள் வீட்டில் பாதுகாப்பாக உணர முடியும். நமது சமூகத்தில் இஸ்லாமிய வெறுப்பு மற்றும் பிரிவினையைத் தூண்டும் வெறுப்பு, பயம் மற்றும் தப்பெண்ணத்தை நாம் முறியடிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
இதேவேளை அக்டோபர் 7, 2023 இஸ்ரேல் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து, காசா மீதான இஸ்ரேலின் இனப்படுகொலைப் போர் தொடங்கியதிலிருந்து அவுஸ்திரேலியாவில் யூத எதிர்ப்பு சம்பவங்களில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளன.
இதன் விளைவாக அவுஸ்திரேலியாவில் இஸ்லாமிய வெறுப்பு இயல்பாக்கம் மிகவும் பரவலாகிவிட்டதால், பல சம்பவங்கள் கூட பதிவாகவில்லை என்று கூறப்படுகிறது. உண்மை என்னவென்றால் அவுஸ்திரேலியாவில் இஸ்லாமிய வெறுப்பு தொடர்ந்து வருகிறது. சில சமயங்களில் ஊடகங்களால் கூட புறக்கணிக்கப்படுகிறது. மற்ற நேரங்களில் மறுக்கப்படுகிறது. ஆனால் முழுமையாக கவனிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
இஸ்லாமிய வெறுப்பு பற்றிய பரந்த அளவிலான விசாரணையை தற்போதய அரசு பரிந்துரைத்துள்ளது. அதன் முக்கிய இயக்கிகள் மற்றும் அரசாங்கக் கொள்கைகளில் சாத்தியமான பாகுபாடுகளை விசாரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக செப்டம்பர் 11, 2001 அன்று அமெரிக்கா மீதான அல்கொய்தா தாக்குதல்களுக்கு பிறகு இஸ்லாமிய வெறுப்பு தீவிரமடைந்து, உலக நாடுகளில் வேரூன்றியுள்ளது.
இதன் விளைவாக அவுஸ்திரேலியாவில் இஸ்லாமிய வெறுப்பு மற்றும் யூத எதிர்ப்பு சம்பவங்களில் பாரிய அதிகரிப்பை அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது. ஐரோப்பா முழுவதும் இஸ்லாமிய வெறுப்பு அதிகரித்துள்ளது. அரசியல் கட்சிகள் மக்கள் குடியேற்ற எதிர்ப்பு நிலைப்பாட்டைப் பரப்புவதால் இது தூண்டப்பட்டுள்ளது என்பதை மறுக்க முடியாது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *