முச்சந்தி

இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்களுக்கு ஓட்டுநர் உரிமங்களை வழங்க அமைச்சரவை ஒப்புதல்

இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்களுக்கு ஓட்டுநர் உரிமங்களை வழங்குவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் கிடைத்துள்ளது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர மேம்பாட்டு அமைச்சர் பிமல் ரத்நாயக்க நேற்று (24) அமைச்சரவையில் தொடர்புடைய அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்தார்.

அதன்படி, அமைச்சரவைப் பத்திரத்திற்கு நேற்றே ஒப்புதல் கிடைத்ததாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அமைச்சரவையால் நிறைவேற்றப்பட்ட முன்மொழிவு இத்தாலியில் உள்ள இலங்கைத் தூதருக்குத் தெரிவிக்கப்பட உள்ளது.

அதன் பிறகு, இத்தாலியில் ஓட்டுநர் உரிமங்களுக்குப் பொறுப்பான நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட உள்ளது. மேலும் 2 மாதங்களுக்குள் இந்தப் பணிகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறியுள்ளார்.

இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்களின் கோரிக்கைகளை பரிசீலித்த பின்னரே இந்த அமைச்சரவைப் பத்திரம் தயாரிக்கப்பட்டதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *