இலங்கை

இலங்கையில் எதிரணிகளின் கூட்டு சமர்; சஜித் அணி புறக்கணிப்பு!

எதிரணிகளால் எதிர்வரும் 21 ஆம் திகதி நுகேகொடையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டத்தில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்காது என தெரியவருகின்றது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பிவிதுரு ஹெல உறுமய உள்ளிட்ட எதிரணிகள் நேற்று கொழும்பில் ஊடக சந்திப்பை நடத்தின.

தேசிய மக்கள் சக்தியின் ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிர்ப்பை வெளியிடும் வகையிலும், ஜனநாயகம் மற்றும் மக்களின் வாழும் உரிமையை பாதுகாக்குமாறு கோரியுமே இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டது.

எனினும், குறித்த ஊடக சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தி பிரதிநிதிகள் எவரும் பங்கேற்கவில்லை. இந்நிலையிலேயே 21 ஆம் திகதி கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்காது என தெரியவருகின்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *