இலங்கை

வெலிகம பிரதேச சபை தலைவர் ஒப்பந்தத்தின் கீழ் படுகொலை!

வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகர அல்லது மிதிகம லசாவின் கொலை தொடர்பாக நடந்து வரும் விசாரணைகளுக்கு மத்தியில், கொலை குறித்து பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற ஒருவருக்கு வழங்கப்பட்ட நிதி ஒப்பந்தத்தின் அடிப்படையில் தென் மாகாணத்தில் உள்ள ஒரு பெரிய பாதாள உலகக் கும்பலால் இந்தக் கொலை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

50க்கும் மேற்பட்ட சிசிரிவி காட்சிகள் மூலம் கொலையாளி தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலும் அவரைக் கைது செய்ய பல சிறப்பு காவல்துறை குழுக்கள் விசாரணை நடத்தி வருகின்றன.

கொலையாளி மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சென்ற வழியை அடையாளம் காண அப்பகுதியில் உள்ள சிசிரிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.

மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்ற சந்தேக நபர்கள் வழியில் இரண்டு தனித்தனி மோட்டார் சைக்கிள்களில் தப்பிச் சென்றதாக கிடைத்த தகவலின் அடிப்படையிலும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

மேலும், சம்பவம் நடந்த நேரத்தில் அப்பகுதியில் பரிமாறிக்கொள்ளப்பட்ட தொலைபேசி அழைப்புகளின் பகுப்பாய்வு அறிக்கைகள் பெறப்பட்டுள்ளன, இது குறித்து தனி விசாரணையும் நடந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

வெலிகம, இப்பாவல பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து மூன்று ரி–56 துப்பாக்கிகள் உட்பட ஒரு தொகை இராணுவ உபகரணங்களை காவல்துறையினர் முன்னர் கண்டுபிடித்திருந்தனர்.

இந்த நிலையில், லசந்த விக்ரமசேகரவே இந்த சோதனை தொடர்பான தகவல்களை காவல்துறையினருக்கு வழங்கியதாக பாதாள உலக குழுக்கள் பலமாக சந்தேகித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், இந்த சோதனையில் கைது செய்யப்பட்ட நபர் மிதிகம ருவானின் நெருங்கிய உறவினர் என்று சந்தேகிக்கப்படுகிறது, இதுவே இந்த கொலைக்கு நெருங்கிய காரணமாக இருக்கலாம் எனவும் விசாரணை அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *