இலங்கை

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு கோரிக்கைளை பரிசீலிக்க அரசாங்கம் தயார்!

முன்னாள் ஜனாதிபதிகள் பாதுகாப்பு தொடர்பாக விடுத்த கோரிக்கைகளை பரிசீலிக்க அரசாங்கம் தயாராகவிருப்பதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் விஜேபால, ஜனாதிபதிகளின் உரிமைகள் (இரத்து செய்தல்) சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட பல சலுகைகள் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் நீக்கப்பட்டன.

பல முன்னாள் ஜனாதிபதிகள் ஏற்கனவே வீடுகள் மற்றும் வாகனங்கள் போன்ற சில சலுகைகளை ஒப்படைத்துள்ளனர்.

எனினும், பாதுகாப்பு விடயம் ஜனாதிபதி உரிமைகள் (இரத்து செய்தல்) சட்டத்தின் கீழ் வராது.

சட்டத்தின் கீழ் சில சலுகைகள் நீக்கப்பட்டிருந்தாலும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது.

தேவைப்பட்டால், வாகனங்கள் உட்பட பாதுகாப்பு தொடர்பான கோரிக்கையை அவர்கள் முன்வைக்கலாம்.

அத்தகைய கோரிக்கைகளை பரிசீலிக்க அரசாங்கம் தயாராக உள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *