இலங்கை

ஜீவன்,அக்காவை அழைத்துச் சென்றது ஏன்?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை, இ.தொ.கா பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், மற்றும் இ.தொ.கா நிதிச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மருதப்பாண்டி ராமேஸ்வரன் ஆகியோர் தங்காலை, கால்டன் இல்லத்தில் (28) சந்தித்தனர்.

இந்த சந்திப்பின் போது, அவர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சுகநிலை குறித்தும் நலம் விசாரித்து உரையாடியதாக இ.தொ.கா ஊடகபிரிவு தெரிவித்துள்ளது. எனினும் ஜீவன் தொண்டமான் தனது அக்காவை அழைத்து சென்றது ஏன்? என சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பட்டுள்ளன.

திருமண அழைப்பிதழை வழங்கவே அவர்கள் சென்றுள்ளனர் என்றும் சொல்லப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *