இலங்கை

ரணில் அழைப்பு சஜித் நிராகரிப்பு; ஆண்டு விழாவில் பங்கேற்கார்

ஐக்கிய தேசியக் கட்சியின் 79 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பங்கேற்கமாட்டார்.

எனினும், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே கட்சி சார்பில் கலந்துகொள்வார்கள் என தெரியவருகின்றது.

கட்சியின் வாழ்த்து செய்தியை வழங்குவதற்காகவே ரஞ்சித் மத்தும பண்டார செல்கின்றார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு நிறைவுக் கூட்டம் பத்தரமுல்லையில் உள்ள மோனார்க் இம்பீரியல் ஹோட்டலில் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் 20 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது .

இவ்விழாவில் பங்கேற்பதற்கு எதிரணியில் உள்ள அனைத்து கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் எதிர்க்கட்சிகளின் பல கட்சித் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

அவர்களில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தலைமையிலான குழு கலந்து கொள்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச இந்த நிகழ்வில் பங்கேற்க மாட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *