இலங்கை

மகிந்த குடும்பத்தினருக்கு மற்றுமொரு நெருக்கடி – லலித் வீரதுங்கவிடம் சிஐடி விசாரணை

மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது ஜனாதிபதி செயலாளராகப் பணியாற்றிய லலித் வீரதுங்கவிடம் குற்றப் புலனாய்வுத் துறை (CID) வாக்குமூலம் பதிவு செய்ய உள்ளது.

விளையாட்டு அமைச்சகத்திற்காக வரி இல்லாமல் இறக்குமதி செய்யப்பட்ட பேருந்து கார்ல்டன் சிறுவர் பாடசாலைக்கு வழங்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக இந்த வாக்குமூலம் பதிவுசெய்யப்படவுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டை விசாரித்து வரும் குற்றப் புலனாய்வுத் துறையின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணையைத் தொடங்கியுள்ளது.

குறித்த காலப்பகுதியில் ஜனாதிபதி செயலகத்தின் கூடுதல் செயலாளராக இருந்தவரிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது.

‘சிரிலிய’ திட்டம் குறித்து குற்றப் புலனாய்வுத் துறை நடத்தும் விசாரணையின் ஒரு பகுதியாக இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.

‘சிரிலிய’ கணக்கு தொடர்பான ஏழு முறைகேடுகள் குறித்து குற்றப் புலனாய்வுத் துறை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை அளித்திருந்தது.

இது தொடர்பாக சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெற நீதிமன்றம் குற்றப் புலனாய்வுத் துறைக்கு உத்தரவிட்டிருந்தது.

ஏழு வழக்குகளில் ஆறில் குற்றப் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய போதுமான ஆதாரங்கள் இல்லை என்று சட்டமா அதிபர் துறை பின்னர் குற்றப் புலனாய்வுத் துறைக்கு தெரிவித்தது.

இருப்பினும், பேருந்து தொடர்பாக புதிய ஆதாரங்கள் வெளிவந்துள்ள நிலையில், குற்றப் புலனாய்வுத் துறையினர் நீதிமன்றத்தில் புதிய ஆதாரங்களை சமர்ப்பித்து விசாரணையை மீண்டும் தொடங்கியுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *