இலங்கை

மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் மைதானத்திலும் மனிதப் புதைகுழியா?;  உறுதிப்படுத்த வேண்டும் என்கிறது காணாமல் போனோர் அலுவலகம் 

மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும்போது அந்தப் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான மனித எச்சங்களோ மனித எலும்புக்கூடுகளோ இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும் என காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சட்டத்தரணி ஜெகநாதன் தற்பரன் தெரிவித்தார்.

சமகால நிலைமைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் வட பிராந்தியத்தில் தனது செயற்பாடுகளை ஆரம்பிக்கும் போது மண்டைதீவு மனித புதைகுழி தொடர்பாக கிடைத்த முறைப்பாட்டுக்கமைய பொலிஸாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டு காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் மேற்படி பகுதிக்கு சென்றது

அந்தப் பகுதி சந்தேகத்துக்கிடமாக இருக்கின்றபடியால் அதனை துரிதமாக அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை 2019 ஆம் ஆண்டிலேயே நாம் விடுத்திருந்தோம். அந்த விடயம் பொருளாதார சிக்கல் கொரோனாவுக்கு பிறகு தற்போது தலை தூக்கி இருக்கிறது.

மண்டைதீவில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட இருக்கின்ற நிலையில் அந்த இடத்தில் அது திறக்கப்படுகிறதோ என்ற அச்ச சூழ்நிலை காரணமாக அந்த விவகாரம் மேற்கிளம்பியுள்ளது.

இந்த விடயப் பரப்புகளில் எங்கள் கரிசனை அதிகமாக இருக்கும். மைதானம் அமைக்கப்படுவதாக இருந்தால் சந்தேகத்திற்கு இடமான மனித எச்சங்களோ மனித எலும்புக்கூடுகளோ இல்லை என்ற உறுதிப்பாடு இருக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.

அதன் பின்னரே இந்த மைதானம் அமைக்கப்பட வேண்டும்.அந்தப் பகுதி அந்த இடத்தில் இருக்குமாக இருந்தால் சம்பந்தப்பட்ட வழக்கு வரும் போது காணாமல் போனோர் பற்றிய அலுவலம் அதனை முன்வைக்கும் – என்றார்.

Loading

One Comment

  1. சர்வதேச கிரிக்கட் மைதானத்தை தடுக்கும் இந்தியாவின் சதியேதான் இது.தமிழர்களின் பகுதிகளில் பாரிய அபிவிருத்திகள் ஏற்பட்டால் இலங்கை அரசக்கு தமிழர்களின் ஒத்துழைப்புக் கிடைத்துவிடும.அப்படிக் கிடைத்தால் எதிர்காலத்தில் தமிழர்களும் சிங்களவர்களம் இனப்பூசல்கள்: இல்லாமல் ஒன்றுக்குள் ஒன்று உறவாடி மகிழ்ந்திருப்பார்கள் என்பதற்காக ;;இந்தியா சிலரைக் கொண்டு இப்படிப் பிரச்சாரம் செய்ய வைக்கின்றது.

    மண்டைதீவில் மனிதப் புதைகுழியிருப்பதை அறிந்து அதையும் வெளிக்கொணர வேண்டுமென்பதற்கா க அநுர அரசு அறிந்துதான் இதைச் செய்வதாகவும் இருக்கலாம்..

    கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் போது அதுவும் வெளிவரட்டுமே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *