இலங்கை
வெளிநாட்டு தொழிலாளர் பண வரவு $5 பில்லியனை எட்டி சாதனை: மத்திய வங்கி அறிக்கை

2025ஆம் ஆண்டில் இலங்கையின் வெளிநாட்டு தொழிலாளர் நாட்டிற்கு அனுப்பிய பணத்தொகை, ஆண்டு முழுவதும் வலுவான வரவுகளால், சாதனை அளவான 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
2025 ஆகஸ்ட் மாதத்தில் அனுப்பிய தொகை 680.8 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது. இது 2024 ஆகஸ்ட் மாதத்தில் 577.5 மில்லியன் டொலர்களாக இருந்த தொகையுடன் ஒப்பிடுகையில் 19.3% வளர்ச்சியாகும்.
ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான காலப்பகுதியில், மொத்த பணவரவு கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் 4,288.2 மில்லியன் டொலர்களாக இருந்த நிலையில், இந்த ஆண்டு 5,116 மில்லியன் டொலர்களை எட்டியுள்ளன.
![]()