உலகம்

பிரதமர் மோடி மற்றும் சீன ஜனாதிபதி இடையே சந்திப்பு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன ஜனாதிபதி சி ஜின்பிங் இடையே கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

மேலும் 07 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா – சீனா இடையே இருதரப்பு உயர்மட்ட பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.

இதில் வர்த்தகம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உறவை வலுப்படுத்த இருதரப்பு கலந்துரையாடல் நடத்தப்பட்டது.

இதனையடுத்து சீனாவில் இடம்பெற உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது ஜப்பான் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து, விமானம் மூலம் நேற்று சீனா சென்றடைந்தார்.

சுமார் 07 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் மோடி சீனா சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *