இலங்கை

ரணில் இதுவரையில் குற்றவாளி இல்லை..! லால் காந்த அதிரடி

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதுவரை குற்றவாளியாகக் கண்டறியப்படவில்லை என்று விவசாய அமைச்சர் கே.டி. லால் காந்த தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியை நீதிமன்றத்தால் கைது செய்து விளக்கமறியலில் வைத்தமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் எதிர்வரும் 26 ஆம் திகதி என்ன நடக்கும் என்பதில் பொதுமக்களின் கவனம் காணப்படுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அதன்படி எதிர்வரும் 26 ஆம் திகதி சட்ட நடவடிக்கைகளைத் தொடர்தல் அல்லது பிணை வழங்காமல் இந்த விஷயத்தை விசாரணைக்கு உட்படுத்துதல் என இரண்டு சாத்தியமான வழிகள் இருப்பதாக குறிப்பிட்டார்.

இந்த சட்ட நடவடிக்கைகளில் தான் தலையிட மாட்டேன் என்றும், அத்தகைய தலையீடு பொருத்தமற்றது அல்லது தவறானது என்றும் தெரிவித்தார்.

மேலும், இந்த நேரத்தில் இந்த விஷயத்தைப் பற்றி விவாதிப்பது கூட பொருத்தமானதல்ல என்றும் கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *