இலங்கை

வரி சலுகையுடன் இலங்கை்கு பெரும் சந்தை வாய்ப்பை வழங்கும் பிரித்தானியா

பிரித்தானியா அறிவித்த புதிய வர்த்தகத் திட்டத்தின் கீழ் இலங்கையின் ஆடைத் தொழிலுக்கு பெரும் ஊக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2026 முதல், இலங்கை ஆடை உற்பத்தியாளர்கள் தங்கள் தயாரிப்புகளை உற்பத்தி செய்ய உலகில் எங்கிருந்தும் பொருட்களைப் பயன்படுத்தி கூடுதல் வரிகள் செலுத்தாமல் பிரித்தானிய சந்தைக்கு கொண்டுச் செல்ல முடியும்.

பிரித்தானியாவின் வளரும் நாடுகளின் வர்த்தகத் திட்ட வசதியின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வரிக் கொள்கையின் கீழ் இலங்கை உட்பட பல நாடுகளுக்கு இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளதாக இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

முன்னதாக, இலங்கை ஆடை உற்பத்தியாளர்கள் தெற்காசிய நாடுகளிலிருந்து பொருட்களைப் பயன்படுத்தினால் மட்டுமே கூடுதல் வரிகள் செலுத்தாமல் பிரித்தானிய சந்தையில் ஆடைகளை விற்க முடிந்தது.

மேலும் ஆடை உற்பத்தியாளர்கள் ஆடைகள் தயாரிக்கப்படும் விதம் குறித்து கடுமையான விதிகளைப் பின்பற்ற வேண்டியிருந்தது.

பிரித்தானியாவின் புதிய வர்த்தகத் திட்டத்தின் கீழ், இலங்கை ஆடை உற்பத்தியாளர்கள் உலகில் எங்கிருந்தும் தங்கள் தயாரிப்புகளை உற்பத்தி செய்ய பொருட்களைப் பயன்படுத்தி கூடுதல் வரிகள் செலுத்தாமல் அங்குள்ள சந்தைய அனுகமுடியும்.

பிரித்தானியா 18 ஆசிய நாடுகளைக் கொண்ட ஒரு புதிய குழுவை உருவாக்கியுள்ளது, இலங்கை தனது ஆடைப் பொருட்கள் உற்பத்திற்கு அந்த நாட்டிலிருந்து பொருட்களைப் பயன்படுத்தலாம்.

மேலும் இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்யும் போது அவை இலங்கையில் தயாரிக்கப்பட்டதாகக் கருதப்படலாம் என்று பிரித்தானியா உயர் ஸ்தானிகராலயம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இது கூடுதல் வரிகள் இல்லாமல் இலங்கை பிரித்தானியாவில் அதிக தயாரிப்புகளை விற்பனை செய்வதை எளிதாக்கும்.

கட்டணக் கொள்கைகளை தளர்த்துவது இலங்கையின் ஆடைத் துறையின் ஏற்றுமதி போட்டித்தன்மையை மேலும் வலுப்படுத்தும். அத்துடன், பிரித்தானியா ஆடை சந்தையில் இலங்கைக்கு புதிய வாய்ப்புகளைத் திறக்கும் என்று உயர் ஸ்தானிகராலயம் வலியுறுத்தியது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *