உலகம்

பாகிஸ்தானில் துப்பாக்கி சூடு ; ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலி

பாகிஸ்தானின் காரில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் மீது துப்பாக்கிச் சூடு தாக்குதல் இடம்பெற்றதில் 7 பேர் உயிரிழந்ததுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் மூலம் தெரியவந்துள்ளது .

இந்த சம்பவம் குறித்து மேலும் மேலும் தெரியவருகையில்,

அருகில் உள்ள கிராமத்திற்கு நேற்று சுற்றுலா சென்று சுற்றுலா பயணத்தை முடித்துவிட்டு நேற்று இரவு 12 மணியளவில் காரில் அனைவரும் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.

ரிஹி ஷினொ ஹெல் என்ற பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது அந்த காரை பைக்கில் வந்த நபர் இடைமறித்துள்ளார்.

பின்னர், தான் வைத்திருந்த துப்பாக்கியால் காரில் இருந்தவர்களை சரமாரியாக சுட்டதில் காரில் பயணித்த 7 பேர் உயிரிழந்தனர். எஞ்சிய ஒருவர் படுகாயமடைந்தார்.

படுகாயமடைந்தவரை மீட்ட அப்பகுதி கிராமத்தினர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அந்த நபருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிஸார், துப்பாக்கிசூடு தொடர்பில் மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *