இலங்கை

முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் உயிருக்கு தமிழர்களால் ஆபத்து

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சலுகைகளைக் குறைப்பதால் அவர் புலம்பெயர் தமிழர்கள் மற்றும் பிரிவினைவாத குழுக்களின் அச்சுறுத்தல்களுக்கு ஆளாக நேரிடும் என கட்சியில் இருந்து விலகிய ஜே.வி.பியின் முன்னாள் அரசியல் குழு உறுப்பினர் நந்தன குணதிலக்க எச்சரித்துள்ளார்.

ஹிக்கடுவையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோதே அவர் இவ்வாறு எச்சரித்துள்ளார்.

இங்கு அவர் மேலும் கூறுகையில்,

தமிழ் புலம்பெயர்ந்தோர் மற்றும் சில ஜே.வி.பி.யின் அரசியல் குழு உறுப்பினர்களின் அழுத்தத்தினால் முன்னெடுக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்த நடவடிக்கை மிகவும் கவலைக்குரியது என தெரிவித்தார்.

மகிந்த ராஜபக்சவை இராணுவத் தீர்வை நோக்கி வலியுறுத்துவதில் ஜே.வி.பி.யின் கடந்த கால பங்கை அவர் நினைவுபடுத்தியதுடன் 2010 ஆம் ஆண்டில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு அவர்கள் ஆதரவளித்ததையும் குறிப்பிட்டார்.

புலம்பெயர் தமிழர்கள் தேசிய மக்கள் சக்தியை ஊக்குவிப்பதில் முக்கிய பங்கு வகிப்பதாக குறிப்பிட்ட அவர், செம்மணிப் புதைகுழியை அகழ்வதில் அதிக ஆர்வம் காட்டும் அரசாங்கம், தற்போது சூரியகந்த மற்றும் ஹோகந்தர புதைகுழிகளிலும் இதேபோன்ற ஆர்வத்தைக் காட்டியுள்ளதாக தெரிவித்தார்.

மகிந்த ராஜபக்ச ஒரு பெரிய பிரிவினைவாதத்தால் இயக்கப்படும் அரசியல் நெருக்கடியைத் தீர்த்து வைத்ததாகவும், ஜே.வி.பி ஒரு காலத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் அமைச்சரவை பதவிகளை வகித்ததாகவும் நந்தன குணதிலக்க குறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *