இலங்கை

புதிய அரசமைப்பு குறித்து ஜனாதிபதி மௌனம்

” நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை அநுரகுமார திஸாநாயக்கவும் அனுபவிக்க ஆரம்பித்துள்ளார்போலும். அதனால்தான் அவரது நாடாளுமன்ற உரையில் புதிய அரசமைப்பு பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.

” புதிய அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்துவதற்காக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கம், தேர்தல் முறைமை மாற்றம் உள்ளடங்கலாக புதிய அரசியலமைப்பு விரைவில் இயற்றப்படும் தேசிய மக்கள் சக்தி உறுதியளித்திருந்தது.

ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் ஒன்றரை மணிநேரம் உரையாற்றினார். எனினும், புதிய அரசியலமைப்பு பற்றி அவர் வாய் திறக்கவில்லை.

எனவே, புதிய அரசியலமைப்புக்குரிய சட்டமூலத்தை தயாரிப்பதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை அமைக்குமாறு யோசனை முன்வைக்கப்படவுள்ளது. இது தொடர்பில் எமது கட்சி முடிவெடுத்துள்ளது.

அரசாங்கத்தன் இறுதி காலகட்டத்தில் புதிய அரசியலமைப்புக்குரிய பணியை முன்னெடுக்க முடியாது. அரசுக்குரிய செல்வாக்கும் இருக்கும்போதே அதற்குரிய பணி ஆரம்பிக்கப்படவேண்டும். ” – என அஜித் பி பெரேரா எம்.பி. மேலும் குறிப்பிட்டார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *