இலங்கை

விஜேராமா மாவத்தையை விட மெதமுலன வீடு சிறந்தது – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச  கொழும்பில் உள்ள விஜேராமா மாவத்தையை விட மெதமுலன வீடு மிகவும் சிறந்தது என்று தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை நீக்குவதற்கு தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இது ஒரு பிரச்சினை அல்ல என்று குறிப்பிட்ட மஹிந்த ராஜபக்ச, தனக்குக் கிடைத்த சலுகைகள் மக்களிடமிருந்து வந்தவை என்றும், அதைத் தவிர வேறு எதுவும் முக்கியமில்லை என்றும் கூறினார்.
“மக்களின் சலுகைகள் இருக்கும் வரை, அவர்கள் எங்களிடமிருந்து எந்த சலுகைகளையும் நீக்கலாம்” என்றும் அவர் கூறினார்.

அரசாங்கம் அரசியல் பழிவாங்கல் காரணமாகவே இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாகவும் மஹிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *