உலகம்

தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்: கம்போடியா உடனடி போர்நிறுத்தத்திற்கு அழைப்பு

தாய்லாந்து-கம்போடியா எல்லைப் பகுதியில் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு, கம்போடியா உடனடி போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

தாய்லாந்து விமானங்கள் கம்போடியப் பிரதேசத்தில் தாக்குதல் நடத்தியதை அடுத்து, இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லை மூடப்பட்டுள்ளது. கம்போடியா, தாய்லாந்து வீரர்கள் முந்தைய ஒப்பந்தத்தை மீறி, எல்லை அருகே இருக்கும் விகாரையை நோக்கி முன்னேறி வந்ததாக குற்றம் சாட்டியுள்ளது

கடந்த 24 ஆம் திகதி ஆரம்பமான இந்த மோதல்களில், 15க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும், 1,30,000க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்ததாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

தாய்லாந்தின் சுரின், உபோன் ரட்சதானி மற்றும் சிசாகெட் மாகாணங்களில் 14 பொதுமக்கள் உட்பட 15 பேர் கொல்லப்பட்டதாக தாய் அதிகாரிகள் தெரிவித்தனர், அதேவேளை கம்போடியாவின் ஒட்டார் மீஞ்சே மாகாணத்தில் ஒரு பொதுமகன் கொல்லப்பட்டதாகவும், 1,500 குடும்பங்கள் இடம்பெயர்ந்ததாகவும் உள்ளூர் அதிகாரிகள் கூறினர்.

தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே எல்லைப் பிரச்னை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், சமீபத்திய மோதல் காரணமாக, இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.

கம்போடியா போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தாலும், தாய்லாந்து இந்த அழைப்பை ஏற்க மறுத்துவிட்டது. மேலும், மூன்றாம் தரப்பு சமரச பேச்சுவார்த்தை தேவையில்லை என்றும் தாய்லாந்து தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *