இலங்கை

சகோதரத்துவ தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாணம் வந்தடைந்தனர் சோஷலிசம் இளைஞர் சங்கம்!

சகோதரத்துவ தினத்தினை முன்னிட்டு  (23) சோஷலிசம் இளைஞர் சங்கம் யாழ் தேவி புகையிரதத்தில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தனர்.

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து இன்று காலை பயணத்தை ஆரம்பித்து பிற்பகல் யாழ்.தேவி புகையிரதத்தில் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.

குறித்த பயணத்தில் குருநாகல் புகையிரத நிலையம் மற்றும் அநுராதபுர புகையிரத நிலையம் ஆகியவற்றில் நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இதேவேளை, யாழ்ப்பாணத்தை வந்தடைந்தவர்கள், யாழ்ப்பாண புகையிரத நிலைய நூலகத்திற்கு ஒரு தொகுதி நூல்களையும் வழங்கி வைத்தனர்.

குறித்த குழுவுடன் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், இளைஞர் விவகார பிரதி அமைச்சர் ஏரங்க குனசேகர, நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் உள்ளிட்டோரும் வருகை தந்தனர்.

அதனை தொடர்ந்து, யாழ்ப்பாண புகையிரத நிலையத்தில் இருந்து ரிம்பர் மண்டபம் நோக்கி நடைபயணம் மேற்கொள்ளப்பட்டு, அங்கு கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதேவேளை, நாளைய தினம் எழுவைதீவுக்கு பயணிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதுடன்
அங்கு 200 பனங்கன்று நடுகை செய்யப்படவுள்ளதுடன், எழுவைதீவு பாடசாலைக்கான அபிவிருத்தி நடவடிக்கைகள், மற்றும் தீவின் இளைஞர்களுக்கான விளையாட்டு உபகரணங்களை வழங்கும் நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *