இலங்கை

அனுர அரசின் சதியொன்று அம்பலம் – 23 ஆம் திகதியன்று கறுப்புக்கொடி போராட்டத்துக்கு அழைப்பு

எதிர்வரும் 23 ஆம் திகதியன்று நட்புறவுப் பாலம் என்ற பெயரில் யாழ்ப்பானத்தில் அனுர அரசின் பாரிய சதித்திட்டம் ஒன்று நிகழவுள்ளதாக எச்சரித்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் கஜேந்திரன், அனுர அரசின் எடுபிடிகளாகச் செயற்படும் நபர்களின் இந்த வலையில் வீழாது அன்றைய நாளில் கறுப்புக்கொடி கட்டி அதற்கு எதிர்ப்பு வெளிபடுத்த வேண்டும் என்றும் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

கொக்குவிலில் உள்ள தனது அலுவலகத்தில் ஊடக சந்திப்பொன்றை நடத்தி அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

எதிர்வரும் 23 ஆம் திகதி அதாவது யூலை 23 என்பது தமிழ் மக்களுக்கு கறைபடிந்த ஒருநாள். இந்நாளின் வரலாற்றை மழுங்கடிக்க அனுர அரசு சதித் திட்டம் ஒன்றை மிக சாதுரியமாக நகர்த்த முயற்சிக்கின்றது.

குறித்த தினத்தன்று தென்னிலங்கையில் இருந்து ஒரு தொகுதி நபர்களை யாழ்ப்பாணத்துக்கு அழைத்துவந்து இங்குள்ள அனுர அரசின் எடுபிடிகளைக் கொண்டு மக்களை ஏமாற்றி அழைத்து இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை உருவாக்குவதாகக் கூறி நட்புறவுப் பாலம் என்ற நிகழ்வை நடத்த முயற்சிக்கின்றது.

இது தமிழர்கள் எல்லோரும் ஒன்றுபட்டு இலங்கையில் நடைபெற்ற யுத்தக் குற்றங்களுக்கு சர்வேச குற்றவியல் விசாரணையை மேற்கொள்ள முயற்சிக்கும்போது அதை சிதைப்பதற்கு அல்லது திசை திருப்பும் நகர்வாகவே இருக்கின்றது.

அனுர அரசின் இந்த சதியில் சிக்காது தமிழ் மக்கள் மிகவும் விழிப்பாக இருபது அவசியமாகும்.

இந்த நட்புறவுக்கு கொண்டாட்டத்தை கொண்டாடுவதானது 1983 ஆம் ஆண்டு நடைபெற்ற பாரிய இனப்படுகொலையை மூடி மறைப்பதற்கான ஒரு தந்துரோபாயமாகவே இது இருக்கின்றது .

கடந்த காலங்ககில் இருந்த அரசுகள் எல்லாம் இந்த விடயத்திற்கு தீர்வை கொடுக்காவிட்டாலும் அதை இல்லாதொழிக்க முயற்சிக்கவில்லை. நினைவேந்தல்களை கண்டுகொள்ளாமல் இருந்தன.

அனால் அனுர அரசு அந்த அரசுகள் எதுவும் தீர்வு கொடுக்கவில்லை என்ற தோற்றத்தை மக்களுக்கு காண்பித்து இந்த விடயத்தை நீர்த்துப்போகச் செய்ய முழுமூச்சாக செயற்படுகின்றது.

குறிப்பாக குறித்த படுகொலைகளுக்கு துர்வு கொடுப்பதில் தாம் உன்னிப்பாக இருப்பது என்பதை காட்டுவது போல ஒரு மாயை உருவாக்கி தமிழ் மக்களின் அழிவுகளை மூடி மறைக்க முயற்சிக்கின்றது.

அது மட்டுமல்லாது சர்வேச விசாரணை அல்லது போர் குற்ற விசாரணை தேவையற்ற விடயம் என்பதை சர்வதேசத்திற்கு காட்டுவதற்கு முயற்சிக்கின்றது.

அந்த முயற்சிக்கான ஒரு நகரவாகவே இந்த நட்புறவு கொண்டாட்டம் மேற்கொள்வதாக தெரிகின்றது. இது அனுர அரசன் ஒரு சதித்திட்டமாகவே இருக்கின்றது.

ஆகவே எதிர்காலம் 23ஆம் திக்தி தென் இலங்கையிலிருந்து வரவுள்ளவர்களுடன் இங்குள்ள அனுர அரசின் எடுபிடிகளின் முயற்சிக்கு எமது மக்கள் உடன் போகக்கூடாது.

அன்றைய நாளை கறைபடிந்த நாளாக நாம் அனைவரும் கறுப்புக்கொடி கட்டி துக்கத்தையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்துவோம் என்றும் தெரிவித்திருந்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *