இலங்கை

இலங்கையை விட்டு வெளியேறிய ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் – அரசுக்கு பெரும் இழப்பு

2022 முதல் 2024 வரையிலான மூன்று ஆண்டு காலப்பகுதியில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து இலங்கையின் 1,489 மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

இதன் காரணமாக, அரசுக்கும், வரி செலுத்துவோருக்கும் 41.5 மில்லியன் டொலர் நிதி இழப்பு ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

மருத்துவர்களின் வெளியேற்றமானது, கிராமப்புற மற்றும் பின்தங்கிய பகுதிகளில் சுகாதார உட்கட்டமைப்பை சீர்குலைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கியமான சிறப்புப் பிரிவுகளில் வெற்றிடங்களுக்கு வழிவகுத்துள்ளது.

அத்துடன் மருத்துவக் கல்வியை சீர்குலைத்தது என்றும் ஆய்வு ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *