இலங்கை

கடன் மறுசீரமைப்பு: அமெரிக்காவிற்கு பொறுப்புள்ளது என ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தல்

அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான வரி சம்பந்தமான பேச்சுவார்த்தைகள் தொடரும் நிலையில், உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவின் கீழ் அமெரிக்காவின் பொறுப்புகளை இலங்கைக்கு நினைவூட்டுமாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) காலக்கெடுவை ஒரு கடன் வழங்குநர் குழுவின் உறுப்பினராக அமெரிக்கா அங்கீகரித்துள்ள நிலையில், தற்போது இலங்கையின் கடன் மறுசீரமைப்பிற்கு உதவுவதற்கு அது கடமைப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். அவ்வாறு செய்யத் தவறினால் ஒப்பந்த மீறலுக்கு ஒப்பாகும் என்று விக்கிரமசிங்க எச்சரித்தார்.

முன்னாள் ஜனாதிபதி ஆலோசகர் சரத் ராஜபத்திரனவின் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய விக்கிரமசிங்க, இலங்கையின் வர்த்தக எதிர்ப்பு மனப்பான்மையையும், உலகமயமாக்கலுக்கு எதிரான அரசியல் ரீதியான எதிர்ப்பையும் விமர்சித்தார். இவை நாட்டை பின்தங்கிய நிலைக்கு தள்ளியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *