மத்திய காசாவில் நீர் பிடிக்க காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேல் வான் தாக்குதல்: ஆறு குழந்தைகள் உட்பட பத்து பேர் பலி

மத்திய காசாவின் அல்-நூசெய்ராட் அகதிகள் முகாமில் நடந்த இஸ்ரேலிய வான் தாக்குதலில், நீர் நிரப்பக் காத்திருந்த ஆறு குழந்தைகள் உட்பட பத்து பேர் கொல்லப்பட்டனர் என அவசரகால சேவை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பத்து பாதிக்கப்பட்டவர்களின் உடல்கள் நூசெய்ராட்டின் அல்-அவ்தா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. இந்தத் தாக்குதலின் விளைவாக ஏழு குழந்தைகள் உட்பட 16 காயமடைந்தவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை மருத்துவர் ஒருவர் உறுதிப்படுத்தினார்.
சம்பவ இடத்திலிருந்த நேரில் கண்ட சாட்சிகள், ஒரு ட்ரோன் நீர் தாங்கியின் அருகே நீர் நிரப்ப நின்ற வரிசையில் நின்றிருந்த மக்கள் கூட்டத்தின் மீது ஒரு ஏவுகணையைச் சுட்டதாகத் தெரிவித்தனர்.
இஸ்ரேலிய இராணுவம் இந்த சம்பவத்தை ஒப்புக்கொண்டது. ஒரு இஸ்லாமிய ஜிஹாத் “பயங்கரவாதியை” குறிவைத்த தாக்குதலின் போது “தொழில்நுட்பப் பிழை” ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக வெடிபொருள் இலக்கிலிருந்து பல பத்தாயிரம் மீட்டர் தூரம் விழுந்ததாகவும் அது கூறியது. இந்த சம்பவம் தற்போது மறுஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் இராணுவம் மேலும் தெரிவித்தது.
![]()