30 வீத வரி குறைப்பு அரசுக்குப் போதுமா?; கேள்வி எழுப்புகிறார் நாமல்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் வரி விதிப்பு தொடர்பில் ஏனைய நாடுகள் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையை ஆரம்பித்துள்ள நிலையில் அரசாங்கம் அது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை என்பதோடு, 30 வீதம் குறைப்பு போதும் என்று அரசுக்கு நினைக்கிறது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், ட்ரம்பின் வரி விதிப்பு தொடர்பில் மிக உன்னிப்பாக செயற்படுமாறு நாம் தொடர்ச்சியா தெரிவித்தோம்.
அரசாங்கம் கடிதம் அனுப்பிட்டு பார்த்துக் கொண்டிருந்தது. அதற்கான பதிலும் கிடைத்து விட்டது.
14 வீதம் குறைப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறுகிறது. ஆனாலும் 30 வீதவரி நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும்.அத்தோடு அநேக துறைகளுக்கும் இது பாதிப்பை ஏற்படுத்தலாம்.
அரசாங்கம் வரிகுறைப்பை சாதாரணப்படுத்தினாலும் தொழில்துறையினர் அதை பாதகமாகவே கருதுகின்றனர். அத்தோடு நாம் ஏனைய வலய வர்த்தக நாடுகளுடன் ஒன்றிணைந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
![]()