இலங்கை

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்;லலித் குகனின் வழக்குகள் CID க்கு மாற்றம்

லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் காணாமல் போனமை தொடர்பான விசாரணை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கு கடைசியாக 2014 ஆம் ஆண்டு மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று கூறிய அமைச்சர், அச்சுவேலி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி 17 சந்தர்ப்பங்களில் நீதிமன்றத்திற்கு வழக்குத் தொடர்பான உண்மைகளைப் பதிவு செய்துள்ளதாகவும் கூறினார்.

வழக்கின் முன்னேற்றம் குறித்து ஜூன் 3, 2025 அன்று பதில் பொலிஸ்மா அதிபர் அச்சுவேலி பொலிஸ் மற்றும் யாழ்ப்பாணப் பிரிவு குற்றப்பிரிவு அதிகாரிகளிடம் விசாரித்தார். அதன்படி, வழக்கு தொடர்பான அனைத்து கோப்புகளும் ஜூன் 11, 2025 அன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டதாக விஜேபால கூறினார்.

இந்த விசாரணையை இனிமேல் சிஐடியின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு கையாளும் என்று அமைச்சர் கூறினார்.

ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் நஜித் இந்திக பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் விஜேபால பதிலளித்தார்.

போருக்குப் பின் காணாமல் போனவர்களான லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோரின் வழக்கு குறித்தும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போருக்குப் பின்னரான காலத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்தும் இந்திக எழுப்பினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *