இலங்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மீண்டும் சந்திரிக்கா வசம்!; மைத்திரியின் கோரிக்கை?

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை, மீண்டும் பொறுப்பேற்றுக் கட்டியெழுப்புமாறு, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் அடிப்படையில் 1994 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை, தாம் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவராகப் பதவி வகித்த காலத்தில், அதனை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்குகளை மீளப்பெறுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, மைத்திரிபால சிறிசேன தொடர்ந்தும் கட்சியின் தலைவர் பதவியில் நீடிக்கத் தயாராக இல்லாததால், அவர் மீது தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை மீளப்பெற, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *