உலகம்

அணு ஆயுத தாக்குதல்; ஈரானின் கூற்றை மறுக்கும் பாகிஸ்தான்!

ஈரானுக்கு எதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்தினால், இஸ்ரேல் மீது பாகிஸ்தான் அணு ஆயுதத் தாக்குதலை நடத்தும் என்ற தெஹ்ரானிய மூத்த அதிகாரியின் கூற்றினை இஸ்லாமாபாத் உடனடியாக மறுத்துள்ளது.

ஈரான் மீது இஸ்ரேல் அணுகுண்டைப் பயன்படுத்தினால், பாகிஸ்தானும் இஸ்ரேலை அணுகுண்டைப் பயன்படுத்தித் தாக்கும் என்று பாகிஸ்தான் எங்களிடம் கூறியுள்ளது என்று இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் தளபதியும் ஈரானின் தேசிய பாதுகாப்பு சபையின் உறுப்பினருமான ஜெனரல் மொஹ்சென் ரெசாய் ஈரானிய அரசு தொலைக்காட்சியில் தெரிவித்தார்.

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஈரானும் இஸ்ரேலும் ஏவுகணைத் தாக்குதல்களை தொடங்கும் என்ற அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இந்தக் கருத்துக்கள் வந்துள்ளன.

எனினும், பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் இந்தக் கூற்றை நிராகரித்ததுடன், இஸ்லாமாபாத் அத்தகைய உறுதிமொழியை அளிக்கவில்லை என்றும் கூறினார்.

எவ்வாறெனினும், இஸ்ரேலுடனான பரந்த மோதலில் ஈரானுக்கான பாகிஸ்தானின் ஆதரவினை அவர் வெளிப்படையாக வெளிப்படுத்தினார்.

ஜூன் 14 அன்று, பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் தேசிய சட்டமன்றத்தில் முஸ்லிம் நாடுகள் இஸ்ரேலுக்கு எதிராக ஒன்றுபட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்திருந்தார்.

இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவுகளைக் கொண்ட முஸ்லிம் நாடுகள் உறவுகளைத் துண்டிக்க வேண்டும் என்றும், இஸ்ரேலுக்கு எதிராக ஒரு கூட்டு மூலோபாயத்தை உருவாக்க இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC) ஒரு கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்றும் ஆசிப் வலியுறுத்தினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *