உலகம்

அவுஸ்திரேலியாவின் பாடசாலையொன்றில் துப்பாக்கிச் சூடு – மாணவர்கள் உட்பட 10 பேர் பலி

அவுஸ்திரேலியாவின் கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் உள்ளூர் நேரப்படி  இன்று காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறந்தவர்களில் மாணவர்கள், வயோதிபர் ஒருவர் மற்றும் சந்தேகிக்கப்படும் துப்பாக்கிதாரியும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

துப்பாகிதாரி மாணவன் எனவும் அந்த மாணவன் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

தற்போது பாடாசாலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அந்நாட்டு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *