உலகம்

உயிருடன் இருப்பது பைடன் இல்லை; பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய டிரம்ப்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் 2020 ஆம் ஆண்டே கொல்லப்பட்டு விட்டார். தற்போது நீங்கள் பார்ப்பது க்ளோன்கள் மற்றும் ரோபோவால் உருவாக்கப்பட்ட ஆன்மா இல்லாத, மனம் இல்லாத உயிரினம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பதிவிட்டுள்ளமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தனது ட்ரூத் சோசியல் சமூக வலைத்தள பக்கத்தில் முன்னாள் அதிபர் ஜோ பைடன் குறித்து இந்த பதிவை டிரம்ப் பகிர்ந்துள்ளார்.

டிரம்ப் பகிர்ந்தற்கு பலரும் கண்டனம்

க்ளோன்கள் மற்றும் ரோபோவால் உருவாக்கப்பட்ட தற்போது நைடன் என்றும் , ஜனநாயக வாதிகளுக்கு வித்தியாசம் தெரிவதில்லை ” என டிரம்ப் ஷேர் செய்துள்ளார்.

இந்நிலையில் ஆதாரமில்லாத இது போன்ற சதிக்கோட்பாடு வகையிலான பதிவை, அமெரிக்கா அதிபர் டிரம்ப் பகிர்ந்தற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஜோ பைடன் அமெரிக்க அதிபராக பதவி வகித்த போதே அவரது உடல்நிலை மோசமாக உள்ளதாக பல்வேறு தகவல்கள் வெளியானது.

சிறுநீரக தொற்று அறிகுறி காரணமாக அவர் மருத்துவப் பரிசோதனை செய்து கொண்ட போது, அவருக்கு தீவிரமான புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பது தெரியவந்தது.

அது குறித்து கருத்து தெரிவித்த டிரம்ப், பைடன் விரைவாக குணமடைய வேண்டும் என கூறியதோடு, அவரின் உடல்நிலை குறித்த விவரங்களை தாமதமாக தெரியப்படுத்தியதாக அவரது குடும்பத்தை சாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *