துருக்கியில் இன்று உக்ரேன்- ரஷ்யா நேரடிப் பேச்சுவார்த்தை!

போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக, துருக்கியில் இன்று (15) உக்ரேன்- ரஷ்யா நேரடி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் போர் நிறுத்தம் ஒப்பந்தம் தொடர்பாக, துருக்கியில் இன்று ( 15) உக்ரைன்- ரஷ்யா நேரடி பேச்சுவார்த்தை நடத்த வுள்ளது.
எவ்வாறு இருப்பினும் குறித்த பேச்சுவார்த்தைக்கு புடின் தனது பிரதிநிதிகளை அனுப்பி வைக்கவுள்ளதாக, ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளது.
இது குறித்து, உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் ”ரஷ்யா போரையும், கொலைகளையும் நீட்டித்து வருகிறது. போர் நிறுத்தம் கொண்டு வர ரஷ்யா மீது அழுத்தம் கொடுக்கும் ஒவ்வொரு நாட்டிற்கும், ஒவ்வொரு தலைவருக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அமைதி மற்றும் ராஜதந்திரத்திற்கு உதவும் அனைவருக்கும் நன்றி” இவ்வாறு பதிவிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
![]()