இலங்கை

முள்ளிவாய்க்கால் வாரத்தின் ஆரம்ப நாள் நினைவேந்தல்…

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூர்ந்து, உயிரிழந்த உறவுகளின் ஆத்மா சாந்திக்கான பூஜை வழிபாடுகள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் ஆரம்ப நாளாகிய திங்கட்கிழமை (12) தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தில் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வும் ஆலய முன்றலில் இடம் பெற்றது.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஏற்பாட்டில் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எஸ்.சுகிர்தன்   தலைமையில் இந்த முள்ளிவாய்க்கால் வாரத்தின் ஆரம்ப நாள் நினைவேந்தல்
முன்னெடுக்கப்பட்டது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *