தூக்கத்தில் ஜோ பைடன்; டிரம்ப் விமர்சனம்

”தூக்கத்தில் இருந்த ஜோ பைடன் குற்றவாளிகளை நம் நாட்டிற்குள் நுழைய வேண்டுமென்றே அனுமதித்தார்” என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து சமூக வலைதளத்தில் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
கொலைகாரர்கள், போதைப்பொருள் கடத்தல் காரர்கள் உள்ளிட்டோரை நம் நாட்டிற்குள் கொண்டுவருவதற்கு மிகவும் கடினமாக போராடி சதி செய்யும் தீவிர இடதுசாரி பைத்தியக்காரர்கள் உட்பட அனைவருக்கும் ஈஸ்டர் வாழ்த்துக்கள்.
நமது தேசத்தின் மீதான இந்தக் கொடூரமான தாக்குதலைத் தொடர அனுமதிக்கும் பலவீனமான மற்றும் பயனற்ற நீதிபதிகள் மற்றும் சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கும் ஈஸ்டர் வாழ்த்துக்கள், இது ஒருபோதும் மறக்க முடியாத அளவுக்கு வன்முறையானது.
தூக்கத்தில் இருந்த ஜோ பைடன், அமெரிக்கா மீது இதுவரை நிகழ்த்தப்பட்ட மிகவும் பேரழிவு தரும் செயலாக வரலாற்றில் இடம்பிடிக்கும் திறந்த எல்லைக் கொள்கையின் மூலம், கோடிக்கணக்கான குற்றவாளிகளை நம் நாட்டிற்குள் நுழைய வேண்டுமென்றே அனுமதித்தார். அவர் மிகவும் திறமையற்றவர். அவர் என்ன செய்கிறார் என்பது முற்றிலும் தெரியாத ஒரு மனிதர். இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார்.
![]()