இலங்கை

திருத்தந்தை பிரான்சிஸ் காலமானார் – வத்திக்கான் அறிவிப்பு

திருத்தந்தை பிரான்சிஸ் தனது 88வது வயதில் காலமானார் என்று வத்திக்கான் கமெர்லெங்கோவின் கார்டினல் கெவின் ஃபெரெல் திங்களன்று அறிவித்தார்.

இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட ஃபாரெல், இன்று திங்கட்கிழமை காலை 7.35 மணிக்கு (உள்ளூர் நேரம் அவர் உயிரிழந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸின் முழு வாழ்க்கையும் கர்த்தருக்கும் அவருடைய திருச்சபைக்கும் சேவை செய்வதற்காக அர்ப்பணிக்கப்பட்டது,” என்று தனது அறிவிப்பில் கூறினார்.

“நற்செய்தியின் மதிப்புகளை விசுவாசத்துடனும், தைரியத்துடனும், உலகளாவிய அன்புடனும், குறிப்பாக ஏழைகள் மற்றும் மிகவும் ஒதுக்கப்பட்டவர்களிடம் வாழ அவர் எங்களுக்குக் கற்றுக் கொடுத்தார்.”

“கர்த்தராகிய இயேசுவின் உண்மையான சீடராக அவரது முன்மாதிரிக்கு மிகுந்த நன்றியுடன், திருத்தந்தை பிரான்சிஸின் ஆன்மாவை, ஒருவருமான கடவுளின் எல்லையற்ற, இரக்கமுள்ள அன்பிற்கு நாங்கள் சமர்ப்பிக்கிறோம்,” என்று ஃபாரெல் மேலும் தெரிவித்துள்ளார்.

ரோமன் கத்தோலிக்க திருச்சபை வரலாற்றில் முதல் லத்தீன் அமெரிக்க திருத்தந்தை என்ற பெருமையை திருத்தந்தை பிரான்சிஸ் பெற்றுள்ளார்.

மார்ச் 13, 2013 அன்று திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தையாக தெரிவுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *