பலதும் பத்தும்

2025-ல் நடக்கப்போகும் பேரழிவுகள் – காணொளி வெளியிட்ட நபரால் பரபரப்பு..!!

ஒருவர் எதிர்காலத்திற்குப் பயணித்ததாக கூறி, 2025 ஆம் ஆண்டு குறித்து தனது கணிப்புகளை ஆன்லைனில் வீடியோவாக வெளியிட்டுள்ளமை தற்போது சமூகவலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.
இந்த விடயம் தொடர்பி்ல் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
காலப் பயணி என்று தன்னைத்தானே அறிவித்துக் கொண்ட எல்விஸ் தாம்சன் (@elvis.thompson.927) என்ற நபர், ஜனவரி 1ஆம் திகதி இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
அதில் 2025-ம் ஆண்டில் பேரழிவு நிகழ்வுகள் நடக்கும் என்று அவர் நம்பும் ஐந்து குறிப்பிட்ட திகதிகளைக் கோடிட்டுக் காட்டுகிறார்.
இவர் கூறும் பேரழிவுகள் அனைத்தும் அமெரிக்காவில் தான் நடக்கும் என்றும் கூறியுள்ளார். இந்த வீடியோவில், ஏப்ரல் 6ஆம் திகதி மணிக்கு 1046 கிலோமீட்டர் வேகத்தில் 24 கிலோமீட்டர் அகலமுள்ள ஒரு சூறாவளி அமெரிக்காவின் ஓக்லஹோமாவைப் பேரழிவிற்கு உட்படுத்தும் என்று தாம்சன் கணித்துள்ளார்.
மேலும், மே 27ஆம் திகதி, இரண்டாவது அமெரிக்க உள்நாட்டுப் போர் வெடிக்கும் என்றும், இது டெக்சாஸ் பிரிவினைக்கு வழிவகுக்கும் என்றும், அணு ஆயுதங்கள் சம்பந்தப்பட்ட உலகளாவிய மோதலைத் தூண்டி, இறுதியில் அமெரிக்காவை அழிவில் ஆழ்த்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இது போதாதென்று செப்டம்பர் 1ஆம் திகதி சாம்பியன் என்ற வேற்றுகிரகவாசியின் வருகையை அவர் முன்னறிவித்ததால், தாம்சனின் கணிப்புகள் வேற்று கிரகவாசிகளின் பக்கமும் திரும்பியுள்ளது.
சாம்பியன் என்ற பெயருடைய இந்த வேற்று கிரகவாசி, 12,000 மனிதர்களை அவர்களின் பாதுகாப்புக்காக மற்றொரு மக்கள் வசிக்கும் கிரகத்திற்கு கொண்டு செல்வார்கள் என்றும் அவர் கூறுகிறார். பூமிக்கு தீங்கு விளைவிக்கும் நோக்கத்துடன் விரோதமான வேற்றுகிரகவாசிகள் இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
எதிர்காலத்தில், செப்டம்பர் 19 அன்று அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையை ஒரு பெரிய புயல் தாக்கும் என்று தாம்சன் கணித்துள்ளார்.
இறுதியாக, நவம்பர் 3ஆம் திகதி , நீலத் திமிங்கலத்தை விட ஆறு மடங்கு பெரியதும், செரீன் கிரவுன் என்று பெயரிடப்பட்ட ஒரு பெரிய கடல் உயிரினம் பசிபிக் பெருங்கடலில் கண்டுபிடிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
தாம்சனின் இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாகப் பரவி வைரலாகியுள்ளதோடு, 20 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும் ஏராளமான கருத்துகளையும் பெற்றுள்ளது.
எனினும் சில பார்வையாளர்கள் இவரின் கணிப்புகளுக்கு சந்தேகம் தெரிவித்துள்ளனர். தாம்சன் அடுத்த வார லாட்டரியில் பரிசு போகும் எண்களை எதிர்காலத்திற்குச் சென்று கணித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நகைச்சுவையாக ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
இவரது வீடியோவைச் சேமித்து வைத்திருப்பதாகவும், ஒருவேளை தாம்சனின் கணிப்புகள் பொய்யென்று நிரூபிக்கப்பட்டால் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் மற்றொருவர் ஆவேசமாக கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *