பலதும் பத்தும்

கடல்மேல் பறக்கும் விமானம்?

கடல் மட்டத்தில் இருந்து 4 மீட்டர் உயரத்தில் பறந்தபடி 3 மணி நேரத்தில் கொல்கத்தா செல்லும் வகையிலான விமானத்தை சென்னையை சேர்ந்த நிறுவனம் ஒன்று வடிவமைத்து வருகிறது. சென்னை ஐஐடி ஆய்வாளர்கள் இணைந்து உருவாக்கும் இந்த விமானம், கடல் பரப்பில் பயணிக்கும் என்பதால் எரிபொருள் செலவு குறையும். இதனால், ஒருவருக்கு ரூ.600 மட்டுமே பயணத்துக்கு செலவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடல் மேல் செல்வதால் எளிதாக வழித்தடங்களை கண்டு கொள்வதோடு விபத்து ஏற்பட்டால் உயிரிழப்பும் குறைவாக இருக்கும். எரிபொருள் செலவு குறைவு என கூறப்படுகிறது.
தூத்துக்குடி திருச்செந்தூருக்கு தனியார் நிறுவனங்கள் இதை கொண்டு வர களத்தில் இறங்கினால் திருச்செந்தூர் மிகப்பெரிய சுற்றுலா தளமாக மாறிவிடும்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *