இலங்கை

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின் தடைக்கு குரங்கே காரணம்

பாணந்துறை உப மின் நிலையத்தின் மின்கட்டமைப்பில் குரங்கொன்று மோதியதன் காரணமாக நாடளாவிய ரீதியில் மின் தடை ஏற்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்தார்.

இந்த சம்பவம் மின் விநியோகத்தை பாதித்ததால் மின்சார விநியோகத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டதாக அமைச்சர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் அமைச்சரின் கூற்றை வலுசக்தி அமைச்சு உறுதிப்படுத்தவில்லை.

மறுசீரமைப்பு முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் மின் தடைக்கான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *