இஸ்ரேலிய படையினருக்கும் ஹெஸ்புல்லா அமைப்புக்கும் இடையில் 60 நாள் யுத்த நிறுத்தம்

ஹெஸ்புல்லா அமைப்பிற்கும் இஸ்ரேலிய படையினருக்கும் இடையிலான 60 நாள் போர் நிறுத்த திட்டத்திற்கு அனுமதி வழங்குவது குறித்து இஸ்ரேலின் போர்க்கால அமைச்சரவை ஆராயவுள்ளது.

இந்த புதிய திட்டத்தின்கீழ் இஸ்ரேல் லெபனானில் இருந்து தனது படைகளை விலக்கிக்கொள்ளும். அதேவேளை ஹெஸ்புல்லா அமைப்பு லிட்டானி ஆற்றுப்பகுதியிலிருந்து தனது உறுப்பினர்களையும் ஆயுதங்களையும் விலக்கிக்கொள்ளும்.

லிட்டானி ஆறு லெபனான் இஸ்ரேல் எல்லையிலிருந்து 30கிலோமீற்றர் தொலைவில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

அந்த பகுதியில் லெபனான் இராணுவத்தினர் நிலை கொள்ளவுள்ளனர்.

யுத்த நிறுத்தத்தை கண்காணிப்பதற்கான ஐந்து நாடுகள் குழுவிற்கு அமெரிக்கா தலைமை தாங்கும்,இந்த உடன்படிக்கையை ஹெஸ்புல்லா அமைப்பு மீறுவதாக கருதினால் அதன் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கான கடிதத்தை அமெரிக்கா வழங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *