முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று கூடுகின்றது: விரைவில் பிரதி அமைச்சர்கள் நியமிப்பு

புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று (19) நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் இன்று காலை அமைச்சரவை கூடவுள்ளது.

21 அமைச்சர்களை உள்ளடக்கிய புதிய அமைச்சரவை நேற்று காலை பதவிப்பிரமாணம் செய்துகொண்டது.

இந்த புதிய அமைச்சரவையில் எழு பல்கலைக்கழக பேராசிரியர்கள், இரண்டு வைத்தியர்கள், ஒரு சட்டத்தரணி, ஒரு பொறியாளர் மற்றும் எழு பட்டதாரிகள் உள்ளனர்.

இதேவேளை, புதிய அரசாங்கத்தின் பிரதி அமைச்சர்கள் நாளை மறுதினம் சத்தியப்பிரமாணம் செய்ய உள்ளனர்.

எவ்வாறாயினும், பிரதியமைச்சர்களின் எண்ணிக்கை தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *