ட்ரம்ப் ஆதரவாளர்கள் மீது பங்களாதேஷில் அடக்கு முறை!

அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்கள் மீது பங்களாதேஷில் பாதுகாப்புப் படையினர் அடக்குமுறையை மேற்கொண்டடுள்ளனர்.

டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவில் இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினருக்கு எதிரான காட்டுமிராண்டித்தனமான வன்முறையை கண்டித்த சில நாட்களுக்குப் பின்னர் இந்த எதிர்ப்பு நடவடிக்கை வந்துள்ளது.

அறிக்கைகளின்படி, வெள்ளிக்கிழமை (08) மாலை டாக்கா மற்றும் பிற நகரங்களில் அமெரிக்கத் தேர்தலில் ட்ரம்பின் உறுதியான வெற்றியைக் கொண்டாட கூடியிருந்த பல குழுக்களுக்கு எதிராக பங்களாதேஷ் படையினரால் இந்த அடக்குமுறை மேற்கொள்ளப்பட்டது.

ட்ரம்பிற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையிலான பேனர்கள் மற்றும் சுவரொட்டிகளையும் பொலிஸார் இதன்போது பறிமுதல் செய்துள்ளனர்.

பின்னர், பங்களாதேஷ் இராணுவமும் காவல்துறையும் நள்ளிரவு சோதனைகளை நடத்தி, அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கு பகிரங்கமாக ஆதரவளித்ததற்காக பல நபர்களை கைது செய்தனர்.

இவர்களில் எந்த அரசியல் கட்சி சார்பற்றவர்களும், சாதாரண குடிமக்கள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *