கைலாசா நாடு எங்கு உள்ளது.?… நாளை அறிவிக்கிறார் நித்தியானந்தா!

பாலியல் உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளான  நித்தியானந்தா மீது தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வழக்குகள் நிலுவையில் இருந்து வருகின்றன. வழக்கு தொடர்பாக காவல் துறையினர் நித்தியானந்தாவை தேடி வரும் நிலையில், கடந்த 2019ம் ஆண்டே அவர் வெளிநாடு தப்பி சென்றுவிட்டதாக சொல்லப்படுகிறது.
தமிழக காவல் துறை தொடங்கி தேசிய புலனாய்வு அமைப்பு வரை தேடியும் நித்தியானந்தாவை கண்டுபிடிக்க முடியவில்லை. கைலாசா எனும் தனித்தீவை உருவாக்கி அங்கு உள்ளதாக நித்தியானந்தா கூறியிருந்தார். இந்நிலையில் கைலாசா எங்கு இருக்கிறது என்ற தகவலை குரு பூர்ணிமா தினமான நாளை அறிவிப்பேன் என நித்தியானந்தா தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *