இந்தியா

ராமர் பாலம்: செயற்கைக்கோள் புகைப்படத்தை வெளியிட்ட ஐரோப்பிய விண்வெளி மையம்

தமிழகத்தின் தனுஷ்கோடிக்கும் இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையேயான ராமர் பாலத்தின் செயற்கைக்கோள் புகைப்படத்தை ஐரோப்பிய விண்வெளி மையம் வெளியிட்டுள்ளது.

1975 ஆம் ஆண்டு விண்வெளி ஆய்வுக்காக பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நிறுவப்பட்ட ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தில் 22 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்த விண்வெளி ஆய்வு மையம் குறித்த புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

Oruvan

கோப்பர்நிக்கஸ் சென்டினெல் – 2 என்ற செயற்கைக் கோள் வழியாக இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

அந்த புகைப்படத்தில் ராமர் பாலம் என அழைக்கப்படும் ஆதாமின் பாலம், இந்தியாவின் தென்கிழக்கு கடற்கரையில் உள்ள இராமேசுவரம் தீவு மற்றும் இலங்கையின் வடமேற்கு கடற்கரையில் உள்ள மன்னார் தீவு இடையே அமைந்துள்ளது.

இந்த பாலம் இந்தியப் பெருங்கடலின் நுழைவாயிலான மன்னார் வளைகுடாவை (தெற்கு) வங்காள விரிகுடாவின் நுழைவாயிலான பாக் ஜலசந்தியிலிருந்து (வடக்கில்) பிரிக்கிறது.

இந்தியாவையும் இலங்கையையும் இணைத்த நிலத்தின் எச்சங்கள் என புவியியல் சான்றுகள் தெரிவிக்கின்றன.

இந்த பாலம் 15ஆம் நூற்றாண்டு வரை பயணிக்கக்கூடியதாக இருந்தது பின்னர் புயல்களால் படிப்படியாக அரிக்கப்பட்டது.

மன்னார் தீவு சுமார் 130 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது மற்றும் இலங்கையின் பிரதான நிலப்பகுதியுடன் சாலைப் பாலம் மற்றும் ரயில் பாலம் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.

அதன் எதிர் பக்கத்தில், இராமேசுவரம் தீவு, இந்திய நிலப்பரப்பில் பாம்பன் பாலத்தின் மூலம் இணைக்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *