வடமாகாண மக்களுக்கான காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!

வடமாகாண மக்களுக்கான உறுமய திட்டத்தின் கீழ் 5000 காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு இன்று ஆரம்பமாகியுள்ளது.

குறித்த நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெறுகின்றது.

இதன் கீழ் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட மக்களுக்கு காணி உறுதிகள் வழங்கப்படவுள்ளதாக காணி ஆணையாளர் நாயகம் பந்துல ஜயசிங்க தெரிவித்தார்.

அத்துடன் இந்த வேலைத்திட்டத்தின் கீழ் அடுத்த மாதம் 22,000 காணி உறுதிப்பத்திரங்கள் விநியோகிக்கப்படவுள்ளதுடன், 18,000 காணி உறுதிப்பத்திரங்கள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக காணி ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

இதேவேளை உறுமய திட்டத்தின் கீழ் மக்களுக்கு வழங்கப்படவுள்ள காணி உறுதிப்பத்திரங்களின் எண்ணிக்கை 20 இலட்சம் ஆகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *