விடுதலை புலிகளுக்கு எதிராக 50000 இளைஞர்களை இராணுவத்தில் இணைத்த அனுர
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் 50,000 இளைஞர்களை இராணுவத்தில் இணைத்ததாக கிழக்கு மாகாண சிவில் சமூக செயற்பாட்டாளர் சிவலோகநாதன் சீலன் தெரிவித்துள்ளார்.
ஊடக நிறுவனத்துக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
“இலங்கையில் இனவாதம் இல்லாத ஒரு தலைவர் இல்லை. அனுர குமார திசாநாயக்க வடக்கு கிழக்கை பிரித்ததோடு 50000 இளைஞர்களை இராணுவத்தில் இணைத்தார்.
அதுபோல, இன்றுவரை மயிலத்தமடு பண்ணையாளர்களுக்கு நீதியை வழங்காத ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை மென்போக்காளர் என கூற முடியாது” என சுட்டிக்காட்டியுள்ளார்.
![]()