வாடகைத்தாய் முறை மனிதாபிமானமற்றது: இத்தாலி பிரதமர் எதிர்ப்பு

வாடகைத்தாய் முறையானது மனிதாபிமானமற்றது என இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியோ மெலோனி தெரிவித்துள்ளார்.

இத்தாலியின் தலைநகரமான உரோமில் நடைப்பெற்ற இளைஞர்களுக்கான மாநாட்டில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்

வாடகைத் தாய் முறை

அவர் மேலும் தெரிவித்ததாவது,

“வாடகைத் தாய் ஒரு மனிதாபிமானமற்ற நடைமுறை என நான் நம்புகிறேன். இது சர்வதேச குற்றமாக ஏற்றுக்கொள்ளப்படும் வரை நான் இதற்கு எதிராக தொடர்ந்து போராடுவேன்.

ஏற்கனவே இத்தாலியில் பணம் செலுத்தியும் அல்லது பணம் செலுத்தப்படாமலும் வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெற்று கொள்ளும் முறை சட்டவிரோதம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெற்று கொள்பவர்களுக்கு தண்டனை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன் படி, 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் $1 மில்லியன் வரை அபராதமும் விதிக்கப்படுவதற்கான புதிய சட்டமூலம் நடைப்படுத்தப்பட்டுள்ளது” என கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *